மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் ; சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல்!
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (23)உத்தரவிட்டுள்ளார்.
மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி, செப்டெம்பர் 17 ஆம் திகதி காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றில் சரணடைந்த சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments