Column Left

Vettri

Breaking News

கடவத்தை மற்றும் மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் ஆரம்பம்!!




 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம இடை பகுதியில் கட்டுமான பணிகள் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து  வைக்கவுள்ளார்  மேலும் திட்டத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க  டாலர் கடன் பெறப்பட்டுள்ளது.

37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளன.

அதனுடன், கடவத்தை இடைமாறு வழி மற்றும் கடவத்தையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 500 மீற்றர்  பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


No comments