உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வில் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான பூக்கன்றுகள் வழங்கிவைப்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வொன்று
கல்முனை ஆதர வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் முன்தினம் 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது .
இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி சுகுணன்.. மருந்தாளர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் செல்வி.பி.சுதர்ஜினி மற்றும் மருந்தாளர்களின் சிறப்பான சேவை பற்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சுற்றாடலை மெருகூட்டுவதற்காக ரூபாய் 10000/- பெறுமதி மிக்க பூ கன்றுகள் பிரதான மருந்தாளரால் வைத்தியசாலைக்கு பரிசளிக்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் ரொஷாந்த், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன், வைத்தியசாலையின் கணக்காளர் எம் . கேந்திர மூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments