Column Left

Vettri

Breaking News

நாளைய ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஆதரவு !!




( வி.ரி. சகாதேவராஜா)

 நாளை 18ம் திகதி திங்கட்கிழமை  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவினை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இக் குறித்த ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவினை வழங்கும்படி கோரியுள்ளார்.

மேற்படி அவர் தெரிவிக்கையில் எமது வடகிழக்கு தமிழர் தாயக பகுதியில் அதீத ராணுவப் பிரசன்னமும் முல்லைத்தீவில் இறந்த இளைஞனுக்கு நீதி வேண்டியும் செம்மணி போன்ற இனப்படுகொலைக்கு நீதியை நிறுத்தகோரியும் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் இது கட்சி பேதங்களுக்கு அப்பால் இனத்தின் நன்மை கருதிய ஹர்த்தால் ஆகவே அனைவரையும் ஒன்றாக ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.

No comments