Column Left

Vettri

Breaking News

நாளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !




 (  வி.ரி.சகாதேவராஜா)


நாளை 28 ஆம் தேதி திங்கட்கிழமை அம்மனுக்குரிய ஆடிப்பூரம்.

 இந்துக்கள் வாழ்கின்ற பட்டிதொட்டியெங்கும் இவ்விழா  கொண்டாடப்படவிருக்கிறது 

 நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை ( 28) திங்கட்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது .

ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில்  ஆடிப்பூரத் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 ஆலய பரிபாலன சபை தலைவர் கே.ஜெயசிறில்  தெரிவிக்கையில் அம்மனுக்கு உரிய இந் நன்நாளில் எமது ஆலயத்தில் இரண்டாவது தடவையாக ஆடிப்பூரம் அனுஷ்டிக்கபடவுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என்று தெரிவித்தார் .

No comments