நாளை திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் நாளை(24) வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இவ் ஆலயத்தின் கொடியேற்றத்திருவிழா கடந்த 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது .
தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ நீதி. அங்குச நாதக்குருக்கள் தலைமையில் கோலாகலமாக பகல் இரவு திருவிழாக்களாக இடம்பெற்று வருகின்றன.
தீர்த்த தினம் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியை அங்கு நடைபெறுவது வழமையாகும்.
தீர்த்தம் இடம் பெற்று மறுநாள் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெறும்.
No comments