கானகப்பாதையில் கொட்டிக்கிடக்கும் நறுங்கனிகள் ! யாத்ரீகர்கள் மகிழ்ச்சி
( வாகூரவெட்டையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
இவ் வருடம் கதிர்காமத்துக்கான கானகப்பாதையில் செல்வோருக்கு வீரைப்பழம் பாலைப்பழம் என்பன சொரிந்து கிடக்கின்றன .
கானகப்பாதையில் பயணிக்கும் பாதயாத்ரீகர்கள் தேவையான அளவிற்கு அவற்றை பறித்து உண்டு சுவைத்தவண்ணம் பயணிக்கிறார்கள் .
காடு பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்களில் காட்சியளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த நறுங்கனிகளை சுவைத்து மகிழ்ந்து பயணிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது.
வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீரை புத்ராஞ்சிவாசியே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய மரமாகும்.
No comments