Column Left

Vettri

Breaking News

சபையின் செயற்பாடுகள் தவறாக நடைபெற்றால் சட்டநடவடிக்கை எடுக்கவும் பிரதேச மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளியிடவும் தயங்கமாட்டோம் - கோடீஸ்வரன் எம்.பி!!




 வி.சுகிர்தகுமார்                    


 திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசுக்கட்;சியின் உறுப்பினர்கள்; இன்று (10) பதவியேற்றனர்.
அக்கரைப்பற்றில் உள்ள அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை சமாதான நீதவானும் தழிரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேசக்கிளை தலைவருமான ஆர்.ஜெகநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்தோடு கட்சிக்கு விசுவாசமாக செயற்படுவதற்கான ஒப்பந்தத்திலும் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களான ஆர்.தர்மதாசா, கலாநேசன், நந்தபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி 10 வட்டாரங்களில் இரு வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனங்கள் 4 அடங்கலாக 6 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் தெரிவான ஆறு உறுப்பினர்களுமே இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னராக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேசம் எப்போதும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கும் மக்களை கொண்ட பிரதேசம். இருப்பினும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
இதேநேரம் பிரதேச சபை செயற்பாடுகள் தவறாகவோ அல்லது மழுங்கப்படும் நிலையிலோ செல்லுமாயின் அதற்கு எதிராக எங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். ஊழலற்ற நேர்மையான பிரதேசமாக செயற்படவும் நேர்மையான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் பிழையான செயற்பாடுகளை தட்டிக்கேட்கவும் எமது உறுப்பினர்கள் தயங்கமாட்டார்கள் என்றார்.
சபையின் செயற்பாடுகள் தவறாக நடைபெற்றால் சட்டநடவடிக்கை எடுக்கவும் பிரதேச மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளியிடவும் தயங்கமாட்டோம் என்றார்.


No comments