வெல்லாவெளியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் !!
செ.துஜியந்தன்
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் முன்னிட்டு "வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் போதையிலிருந்து மீட்டெழுங்கள்
எனும் தொனிப்பொருளில் வெல்லாவெளி சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வெல்லாவெளி பிரதான சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மீண்டும் வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் ஊர்வலம் நிறைவுசெய்யப்பட்டது. இதில் ஏராளமானோர்கள் கலந்துகொண்டு "போதை
பொருட்களை ஔி்போம்
மனித மான்பை காப்போம்'
"போதையை தொடாதே சாதனை படைப்போம்" "போதையை அளிக்கும் போதை"
"வேண்டாம்வேண்டாம் மதுவேண்டாம்"
போன்ற பல வாசகங்கள் உள்ளிட்ட பதாதைகளை தாங்கியவாறு ம், கோஷங்களையும் எழுப்பிய வண்ணம் இவ் விழிப்புனர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்
போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்சணன்
பிரதம அதிதியாகவும்
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜெயராஐ் முகாமைத்துவப்பணிப்பாளர் அ.குககுமரன் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி யோகச்சந்திரன் திட்டமுகாமையாளர் சுதாஐினி
வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி L.H.பிரசாந்த சில்வா
சுகாதார பரிசோதகர் குபேரன் போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் சதீஸ்குமார்
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் சமுதாய அமைப்பினர் பொதுமக்கள் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது
No comments