புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தினை வலியுறுத்துகின்றது-முபாறக் அப்துல் மஜீத் முப்தி!!
பாறுக் ஷிஹான்
ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலகளாவிய முஸ்லிம்களுக்கும் இலங்கை போன்ற சில நாடுகள் ஹஜ் பெருநாளை அறிவிக்காத நிலையில் மக்கா ஹஜ் பிறையை ஏற்று சிறு குழுவாகவும்இ தனியாக தன் வீட்டிலும் பெருநாள் தொழுதோருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் என முபாறக் உலமா கட்சித்தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி ஹஜ் பெருநாள் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும்.சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, பிரார்த்தனை செய்கிறார்கள்,னித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர்.இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீகப் பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் இந்த ஹஜ் கடமையானது, மனிதர்களுக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலகின் நாற்திசைகளிலும் இருந்து வருகின்ற அனைத்து மக்களும் ஒரே விதமாக இறைவனை வணங்கும் உயர்ந்த வணக்கமாகும்.
புனித மக்கா நகரை மையமாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் இஸ்லாம் சமூகத்துக்கும் எனது இதயபூர்வமான ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தினை வலியுறுத்துகின்றது. விசுவாசம், தியானம், தேவையுள்ளோருக்கு உதவுவது, நோன்பு என்பவற்றோடு தியாகமானது இஸ்லாம் மார்க்கத்திலே முக்கிய இடத்தை பெறுகின்றது.
எம் நாட்டில் புதிய அத்தியாயத்தை நோக்கி செல்லுகின்ற இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஹஜ் பெருநாளின் தாற்பரியமான தியாகத்தினை மனதிலே கொண்டவர்களாய், நிலையான சமாதானத்தை எம் நாட்டில் ஏற்படுத்த முன் வர வேண்டும் என அழைப்பு விடுக்க விரும்புகிறேன் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும்.சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, பிரார்த்தனை செய்கிறார்கள்,னித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர்.இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீகப் பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் இந்த ஹஜ் கடமையானது, மனிதர்களுக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலகின் நாற்திசைகளிலும் இருந்து வருகின்ற அனைத்து மக்களும் ஒரே விதமாக இறைவனை வணங்கும் உயர்ந்த வணக்கமாகும்.
புனித மக்கா நகரை மையமாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் இஸ்லாம் சமூகத்துக்கும் எனது இதயபூர்வமான ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தினை வலியுறுத்துகின்றது. விசுவாசம், தியானம், தேவையுள்ளோருக்கு உதவுவது, நோன்பு என்பவற்றோடு தியாகமானது இஸ்லாம் மார்க்கத்திலே முக்கிய இடத்தை பெறுகின்றது.
எம் நாட்டில் புதிய அத்தியாயத்தை நோக்கி செல்லுகின்ற இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஹஜ் பெருநாளின் தாற்பரியமான தியாகத்தினை மனதிலே கொண்டவர்களாய், நிலையான சமாதானத்தை எம் நாட்டில் ஏற்படுத்த முன் வர வேண்டும் என அழைப்பு விடுக்க விரும்புகிறேன் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments