Column Left

Vettri

Breaking News

புதிய விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது - அமைச்சர் பிமல் சபையில் விளக்கம்




 இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் எயார்  பஸ் விமானம் குத்தகை அடிப்படையிலானது. 8 வருடங்களில் அதனை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில்  எதிர்க்கட்சி உறுப்பினர்  கில்ஸ் நெல்சன் உரையாற்றுகையில், விமான சேவைக்கு அரசாங்கம்  புதிதாக கொண்டுவந்திருக்கும் விமானத்தின் தரம், அதன் வசதி வாய்ப்புக்கள், அது பழைய விமானம் என்றாலும் அதன் மறுசீரமைப்பின் தரம் தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என கேண்டுக்கொண்டார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிரமல் ரத்நாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவந்திருக்கும் எயார் பஸ் விமானம், மாதத்துக்கு 1000 டொலர் என்ற அடிப்படையில் குத்தகைக்கே கொண்டுவந்திருக்கிறோம். 8 வருடங்களில்  அதனை மீண்டும் குறித் கம்பனிக்கு  திருப்பிக்கொடுக்க வேண்டும்.

 இந்த விமானம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என்பது  உண்மை. புதிய விமானம் கொள்வனவு செய்வதற்கு இப்போதைக்கு எங்களுக்கு முடியாது. புதிய விமானம் கொள்வனவு செய்ய 1.3 மில்லியன் ரூபா செலுத்த  வேண்டும்.

தற்போது நாங்கள் கொண்டுவந்திருக்கும் விமானம்  மிகவும்  நல்ல முறையில் மறுசீரமைத்தே கொண்டுவந்திருக்கிறோம். விமானத்தின் பாகங்கள்,இன்ஜின் மிகவும் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தின் தரம் தொடர்பில்  எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் இந்த  விமானத்துக்கான குத்தகையை நல்லமுறையில் செலுத்தி,  8 வருடங்களில் மீள ஒப்படைக்க இருகிறோம். எதிர்காலத்தில் மேலும்  விமானங்களை கொண்டுவந்து இந்த சேவையை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டிருக்கிறோம். அதனால்  இந்த  விமானம் தொடர்பில் தரம் குறைவாக கதைப்பது நல்லதில்லை என்றார்.


No comments