அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தலைவர்களை தெரிவு செய்யும் கூட்டங்கள் ஆரம்பம்!
(வி.ரி. சகாதேவராஜா)
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் கூட்டங்கள் நேற்று புதன்கிழமை (25) ஆம் திகதி
ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி சபைகளுக்கு சென்று அத் தெரிவு கூட்டங்களை சிறப்பாக நடாத்தி வருகிறார்.
ஏலவே மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் வெற்றிகரமாக இத் தெரிவுகளை சட்டப்படி நடாத்தி வந்தார்.
நேற்று நாவிதன்வெளி காரைதீவுடன் ஆரம்பமான இத் தெரிவுக் கூட்டங்கள் ஜுலை மாதம் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவித்தல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு 25 ம் திகதி நேற்று நடைபெற்றது.
இன்று 26 ஆம் தேதி சம்மாந்துறை, இறக்காமம் பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நடைபெறும்.
பொத்துவில், லாகுஹல பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நாளை 27 ம் திகதி நடைபெறும்.
ஆலையடிவேம்பு, மஹஓய பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு 30ம் திகதி, தெஹியத்தக்கண்டிய, பதியத்தலாவ பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு ஜுலை மாதம் 01 ம் திகதி, நிந்தவூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைகளுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு 02 ம் திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி சபைகளில் கல்முனை மாநகர சபையை தவிர்த்து ஏனைய 44 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இதேவேளை,50 வீதத்துக்கு அதிகமாக உறுப்பினர்களை பெற்றுள்ள தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் மேயர், தவிசாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்,செயலாளருடன் இணைந்து சுயமாக தத்தமது உள்ளூராட்சி மன்றங்களின் சபை அமர்வுகளை ஆரம்பித்துள்ளமீதி 30 சபைகளுக்கான தலைவர் தெரிவு இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments