Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி!!




 வி.சுகிர்தகுமார்                     


 கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நேற்று (10) நிறைவுற்றன.

பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 04ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து அம்மனின் உற்சவம் கிரியைகள் 06 ஆம் திகதி இடம்பெற்ற அம்மனின் திருக்கதவு திறக்கும் நிகழ்வுடனும் 09ஆம் திகதி இடம்பெற்ற கால்யாணக்கால் நடும் சடங்குடனும் 10 ஆம் திகதி இடம்பெற்ற மாலை இடம்பெற்ற திருக்குளிர்த்தி சடங்கு 11ஆம் திகதி இடம்பெறும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் சடங்குடன் இனிது நிறைவுறுகின்றது.
 நேற்று பிற்பகல் அம்மனுக்கான பொங்கல் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் நேர்பொங்கலில் ஈடுபட்டனர். பின்னர் சிலம்பொலி, உடுக்கை ஒலி, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா எனும் ஒலியுடன் அம்மனவள் எழுந்தருளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்ததுடன் அம்மனவளுக்கு குளிர்ந்தருளப்பட்டு வாழிபாடப்பட்டதன் பின்னர் கருவறையில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
 இறுதியாக பூசகர்களினால் திருக்குளிர்த்தி பாடப்பட்டதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரியப்பட்டதுடன் அடியவர்களுக்கு திருவருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதேவேளை திருக்குளிர்த்தி தினத்தன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலான உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடியவர்களுக்கான தாகசாந்தி பந்தலை அமைத்திருந்ததுடன் ஆலயத்தில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 வழிபாட்டுக்கிரியைகளை ஆலய பிரதம பூசகர் கு.ரவீந்திரநாதன்; தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைத்தனர்.
 வழிபாடுகளில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






No comments