Column Left

Vettri

Breaking News

பாண்டிருப்பு மகா வித்தியாலயம் மாணவர்களால் சுற்றாடல் விழிப்புணர்வு ஊர்வலம்






செ.துஜியந்தன்

இன்று உலக சுற்றாடல்  தினத்தையொட்டி பாண்டிருப்பு மகா வித்தியாலயம் சுற்றாடல் கழகம் மாணவர்களினால்  சமூகத்தில் பிளாஸ்டிக் மாசு பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம்  அதிபர் கே.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.









கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ்   விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலையில் இருந்து  ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக  பாண்டிருப்பு கல்முனை எல்லைவரை சென்று பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கு எதிரான. விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள். சுத்தமான காற்றை சுவாசிக்க பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம்,  தடை செய் தடைசெய் பிளாஸ்டிக்கை தடைசெய், காப்போம் காப்போம் சுற்றாடலைக் காப்போம், பிளாஸ்டிக் மாசு பாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் போன்ற பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

No comments