Column Left

Vettri

Breaking News

திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்! 65 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கிவைப்பு!!




 ( வி.ரி. சகாதேவராஜா)

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

சமூக தரிசன நிறுவனமும் சக்தி சன சமூகநிலையமும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நேற்று நடத்தினர் .

 இந் நிகழ்விலே திருக்கோவில் காயத்ரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் இனிப்பு என்பன  வழங்கி வைக்கப்பட்டன.

 இந்நிகழ்வில் எஸ்ஸ் வீ ஓ அமைப்பின்   பிரதேச தலைவர் கே. பத்மநாதன்  காயத்ரி கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் எஸ். ஷடாட்சரன் சிறப்பு அதிதியாக கண. இராஜரத்தினம்  எஸ் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இந் நிகழ்வில் ஊன்றுகோல் தேவையான முதியோர்களுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.

 மகிழ்ச்சி நிகழ்வாக மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.







No comments