திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்! 65 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கிவைப்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.
சமூக தரிசன நிறுவனமும் சக்தி சன சமூகநிலையமும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நேற்று நடத்தினர் .
இந் நிகழ்விலே திருக்கோவில் காயத்ரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் இனிப்பு என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எஸ்ஸ் வீ ஓ அமைப்பின் பிரதேச தலைவர் கே. பத்மநாதன் காயத்ரி கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் எஸ். ஷடாட்சரன் சிறப்பு அதிதியாக கண. இராஜரத்தினம் எஸ் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
இந் நிகழ்வில் ஊன்றுகோல் தேவையான முதியோர்களுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.
No comments