Column Left

Vettri

Breaking News

49 நாட்களில் உகந்தமலையை சென்றடைந்த யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்




 ( வி.ரி.சகாதேவராஜா)


யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து மே மாதம் 1 ஆம் புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 49 நாட்களில் இன்று (18)  புதன்கிழமை உகந்தமலை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.

முன்னதாக யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 98 பேர் பாணமை மற்றும் சன்னியாசி மலையில் தரித்து நின்று  49 நாட்களில் காட்டுப் பாதையில் பிரவேசிக்கும் நுழைவாயிலான உகந்தமலையை இன்று சென்றடைந்தனர்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரைக் குழுவினர் இன்று உகந்த மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்திருக்கிறார்கள்


அங்கு அவர்களுக்கு யாழ்.செல்வச் சந்நிதி மோகன் சுவாமிகள் மற்றும் கல்முனை சரவணாஸ் லதன் ஆகியோர் தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வைக்கவுள்ளனர்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இவர்கள் காட்டுப் பாதையில் பிரவேசிக்கவுள்ளனர்கள்.



No comments