Column Left

Vettri

Breaking News

நடைபெற்ற உயிர்ப்பு பெருவிழா மற்றும் சித்திரைப்புத்தாண்டு கலாச்சார விளையாட்டு நிகவ்வுகளும்.!!.




(க.டினேஸ்) 

கடந்த 2025/05/13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத் தந்தை மற்றும் இளைஞர் ஒன்றியத்தினரினால் நடத்தப்பட்ட இவ் நிகழ்வில்  சிறியவர், பெரியவர்கள் என பல மக்கள் கலந்துகொண்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் , இளைஞர் மற்றும் பெரியோர்களுக்கான பல போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், 2025/05/12 ஆம் திகதி திங்கள்கிழமை வட்டாரங்களுக்கிடையே இளைஞர்களுக்காக நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இறுதியில் இரண்டு வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்டு முதல் இடத்தை இருதயபுர வட்டாரமும், இரண்டாவது யூசைபுர வட்டாரமும் தெரிவு செய்யப்பட்டது. இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், பல பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது. 

மேலும் பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் தலைமையில் இவ் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் பாத்திமா ஷபானா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









No comments