"சுரளா" கணித ஆய்வு கூடம் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைப்பு!!
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அலுவலக கட்டடத்தில் SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் Action unity lanka (AU Lanka) வுடன் இணைந்து தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் நேற்று(14) தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தலைவர் திரு. ஜெ.ஜெயப்பிரகாஷ் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் திரு. ஜெ.அதிசயராஜ் அவர்களும் சிறப்பதிதிகளாக கல்முனை பிரதி கல்விப்பணிப்பாளரும் காரைதீவு கல்முனை தமிழ்பிரிவு கோட்டாக்கல்விப் பணிப்பாளர் திரு.எல். சஞ்ஜீவன் , முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.கே.விமலநாதன் அவர்களும் , கல்முனை ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் திரு.என்.அரவிந்தன் அவர்களும், மற்றும் கௌரவ அதிதியாக AU Lanka கிழக்கு மாகாண தலைமை நிர்வாக அதிகாரி திரு.கே.கஜேந்திரன் அவர்களும் மற்றும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிருவாக உறுப்பினர்கள், AU Lanka நிருவாக உறுப்பினர்கள் SuRaLa திட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு நிகழ்வின் முக்கிய நோக்கமாக மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியான Tabகள் வழங்கப்பட்டு "சுரளா" எனும் செயலி மூலம் கணித அறிவை மேம்படுத்ததற்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.
No comments