லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களும் நேற்று தமிழின அழிப்பு நினைவு நாள் அனுஷ்ட்டிப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையில் மே 18 இல் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்து
நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டனில் வாழும் ஈழத் தமி
ழர்களும் நினைவு தினத்தை ஆர்ப்பாட்டம் பேரணியில் ஈடுபட்டு அனுஷ்டித்தனர்.
21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச இன அழிப்பின் 16 வது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் என்ற பதாகையை தாங்கிய வண்ணம் ஈழத் தமிழர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு என்பன இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்தன.
பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள்
பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியின் பின்னர் தமிழ்
மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை
மீள பெற்றுக்கொள்வதற்கு உதவ
வேண்டிய கடப்பாடு பிரிட்டனிற்கு
உள்ளதை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வில் உலகளாவிய
புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு
No comments