இன்றைய வானிலை!!
நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments