Column Left

Vettri

Breaking News

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வைத்திய பரிசோதனை!!




செ.துஜியந்தன்  

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையம் ஏற்பாட்டில்  உயர் குருதி அமுக்க தினத்தை முன்னிட்டு  அரச  அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய தொடர்பான வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.புவனேந்திரநாதன் வழிகாட்டலில் இவ் வைத்திய பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.  அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் இரத்த அழுத்தம், குருதி பரிசோதனை, உயரம், நிறை , கொலஸ்டரோல் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு வைத்திய ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்கப்பட்டும் வருகிறது.





இன்று பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments