Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் இலவச வீதி நடமாடும் ஆயுர்வேத வைத்திய முகாம்!!




செ.துஜியந்தன்

கிழக்கு மாகாண  சுதேச வைத்திய திணைக்களம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியனவற்றின் வழிகாட்டலில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இலவச  வீதி நடமாடும் ஆயுர்வேத வைத்திய முகாம்  நிந்தவூரில் இடம் பெற்றது 

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி.யூ.எல்.நிஹாயா தலைமையில் நடைபெற்ற இந்த இலவச நடமாடும் வைத்திய முகாமில் கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் எம் ஏ நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த நடமாடும் சேவையை வைப்பவரீதியாக ஆரம்பித்து வைத்தார்

இதன் போது நீரிழிவு நோய்க்கான இரத்த பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த நடமாடும் வைத்திய முகாமில் கலந்து கொண்ட சகலருக்கும் இலைக்கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது

ஆயுர்வேத மற்றும் யூனானி வைத்திய வாழ்க்கை முறையின் ஊடாக நீரிழிவு நோயற்ற நாட்டை கட்டி எழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் இடம் பெற்ற இடம்பெற்ற இந நடமாடும் ஆயுர்வேத வைத்திய முகாமில்  ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம் எஸ் எம் நஜீப், டாக்டர் வை.எப்.றுவைஸா, டாக்டர் ஐ எல்.பர்சான், டாக்டர் ஆர் எப் றிஸ்மியா ஆகியோர்களும் கலந்து கொண்டு இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டோமை குறிப்பிடத்தக்கதாகும்





No comments