Column Left

Vettri

Breaking News

திங்களன்று கிழக்கில் வைகாசி சடங்கு ஆரம்பம்!




( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை(2) கற்புக்கரசி கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு ஆரம்பமாகிறது. சில ஆலயங்களில் 5 ஆம் திகதி இச் சடங்கு ஆரம்பமாகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை 2ஆம் திகதி கதவுதிறத்தல் கடல்தீர்த்தம் கொணரல் கல்யாணக்கால் நடல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 07தினங்கள் சடங்கு இடம்பெற்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவுறும். அதற்கான முன்னோடிக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.

No comments