Column Left

Vettri

Breaking News

காரைதீவு மக்களும் பங்கேற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் கருங்கல் சிலை திறப்பு விழா !!




 (வி.ரி. சகாதேவராஜா)


உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்  15அடி உயர கருங்கல் கற்சிலை  மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டபோது காரைதீவில் இருந்தும் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் இருந்து சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றத்தினர் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

"விடிவானம் கண்ட கிழக்கொளியே! " என்ற மகுடத்திலான வாழ்த்து மடல் அங்கு  பணி மன்றத்தால் காரைதீவு மக்கள் சார்பாக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.








No comments