காரைதீவு மக்களும் பங்கேற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் கருங்கல் சிலை திறப்பு விழா !!
(வி.ரி. சகாதேவராஜா)
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 15அடி உயர கருங்கல் கற்சிலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டபோது காரைதீவில் இருந்தும் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் இருந்து சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றத்தினர் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
"விடிவானம் கண்ட கிழக்கொளியே! " என்ற மகுடத்திலான வாழ்த்து மடல் அங்கு பணி மன்றத்தால் காரைதீவு மக்கள் சார்பாக கையளிக்கப்பட்டது.
No comments