தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள் கைது!!
கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி, செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம் பூசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
வளாகத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வழங்கிய ரகசிய தகவலைத் தொடர்ந்து அந்த ஆயுதம் கைப்பற்றப்பட்டது.
No comments