தமிழ்த்தேசியத்திற்காக மக்கள் ஆணையினை வழங்கியிருந்தும் இணக்கப்பாட்டிற்கு வராமல் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் காலத்தை இழுத்தடிப்பது கவலைக்குரிய விடயம்;அக்கரைப்பற்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!
(வி.சுகிர்தகுமார்)
தமிழ்த்தேசியத்திற்காக மக்கள் ஆணையினை வழங்கியிருந்தும் இணக்கப்பாட்டிற்கு வராமல் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் காலத்தை இழுத்தடிப்பது கவலைக்குரிய விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துசானந்தன் தலைமையில் இன்று (16)இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் உயர்நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டதன் பின்னர் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
; உள்ளுராட்சி மன்ற தேர்தல் அபிவிருத்தியை நோக்காக கொண்ட ஒரு குட்டி தேர்தல்.
கொள்கையினை முன்னுரிமைப்படுத்தாமல் தமது சொந்த பந்தங்கள் என்று முகம் பார்த்து வாக்களிக்கும் தேர்தல். ஆயினும் அதனையும் தாண்டி மக்கள் தமிழ்த்தேசியத்திற்காக வாக்களித்துள்ளனர். ஆனாலும் தமிழ்த்தேசியத்தினை பேசி வாக்கினை பெற்றவர்கள் பின்னர் அதனை வலியுறுத்தாமலும் ஒற்றுமைப்படாமலும் செயற்படுகின்றனர். இவ்வாறு தொடர்ந்தால் பேரினவாத கட்சிகளுக்கே அது வாய்ப்பாகும் என குறிப்பிட்டார்.
இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதில் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதில் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments