Column Left

Vettri

Breaking News

பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!




பாறுக் ஷிஹான்

 ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்

கடந்த   சனிக்கிழமை (30) இரவு 9.00 மணியளவில் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறித்த இளைஞனை  கைது செய்திருந்தனர்.

 கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குருநாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போதுஇ கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்துஇ சந்தேக நபரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்இ இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments