வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!!
வவுனியா, ஓமந்தை - சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.
நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை - சேமமடு பகுதியில் நேற்று மாலை மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது
.jpeg)
No comments