திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டார் தே.கா. தலைவர் அதாவுல்லா !
பாறுக் ஷிஹான்
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் சகிதம் இன்று மனு ஒன்றினை கைளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு சென்று இன்று குறித்த மனுவை கையளித்துள்ளதுடன் குறித்த மனுவில் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என கோரி பல தரப்பினரிடம் தேசிய காங்கிரஸ் தலைவராக சென்று கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே வேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை தனக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கைளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.
No comments