Column Left

Vettri

Breaking News

தாமரை கோபுரத்தை இரவு 11மணி வரை பார்வையிடலாம்!!




 நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தைப் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு வரையும், எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிமுதல் இரவு 11 மணி வரையும் தாமரைக் கோபுரம் திறக்கப்படவுள்ளது.
 
அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி முதலாம் திகதி ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரை திறக்கப்படவுள்ளதாகக் கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

No comments