Vettri

Breaking News

பெரும்போகத்துக்கான உர மானிய விநியோகம்: முதல் கட்ட பணி நிறைவு!!





பெரும்போகச் செய்கைக்கான உர மானிய விநியோகத்தின் முதற் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களிலுள்ள 86,162 ஹெக்டயர் காணிகளுக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 1,29,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படுவதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படுமென கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு கிரிதலை மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களிலிருந்து தாமதமாக நீர் திறந்து விடப்படுகிறது.இதனால்,இந்த விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

No comments