Vettri

Breaking News

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் புல்மோட்டையில் ஒருவர் கைது





 திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் புல்மோட்டை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் திருகோணமலை - புல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.

புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments