Vettri

Breaking News

யால சரணாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது!!




 யால சரணாலயத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

யால சரணாலயத்தின் 06 ஆம் இலக்க வலயத்தில் நேற்று(15) மாலை 6 மணியளவில் வனவள அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். வனவள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செயயப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments