Column Left

Vettri

Breaking News

சிலாபத்தில் பஸ் வண்டிக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) சிலாபம் – பண்டாரவத்தை பகுதியில் தனியார் பஸ் வண்டிக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலொன்று மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் பஸ் வண்டி தனது பயணங்களை நிறைவு செய்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பஸ் வண்டியின் அன்றாட வருமானக் கணக்குகளை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொழுதில், திடீரெனப் பஸ் வண்டிக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல் அங்கு நின்ற இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்துள்ளது. பஸ் வண்டிக்குள் நிகழ்ந்த இந்த எதிர்பாராத வன்முறையில் மாதம்பே – மெதகம பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே நிலைகுலைந்து போயுள்ளனர். தாக்குதலாளிகள் கூரிய ஆயுதங்களால் வெட்டியும், பாதுகாப்புத் தலைக்கவசங்களால் (Helmet) கொடூரமாகத் தாக்கியும் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் வெட்டுக் காயங்களுக்குள்ளான ஒரு இளைஞர் அவசர அவசரமாகச் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மற்றைய இளைஞர் தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தனிப்பட்ட தகராறு ஒன்றே இத்தகைய பாரதூரமான மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சிலாபம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்

No comments

Subscribe Us