சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் கலந்துரையாடல்..!
(எம்.என்.எம்.அப்ராஸ்)
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நேற்று(23)இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன்(INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர்.அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எல்.றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ.அப்ரோஸ்,எம்.பி.நூமைசா, எஸ்.எப்.சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இதன் போது அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மேலும் அம்பாரை மாவட்டத்தில் பொது மக்களின் சமூக நல சார் விடயங்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுத்து செல்லுதல்,கல்முனை பிரதேசத்தில் இரத்ததான முகாம்,சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிரமதானபணிகள் மேற்கொள்ளல் நல்லிணக்க செயற்பாடுகள்,மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வேலைத் திட்டங்கள் என்பன இடம்பெற இதன் போது தீர்மானிக்கப்பட்டது .
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (International Human Rights Global Mission – IHRGM) அமைப்பின் பிரதி பணிப்பாளர்களான எம். எச்.எப்.சாஹானா பானு,எம்.எப்.எப்.அக்ஸா இணைப்பாளர்களான ஜே.எப்.சுஜிமா, எம்.ஆர்.எம்ரோசான்,எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம்,ஏ.எம்.எப். ரிபா,ஆர்.எம்.ரூமி, ஐ.ஜாபீர்,அங்கத்தவரான செயின் நௌபல் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.
No comments