Column Left

Vettri

Breaking News

19 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!




பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 18 கிலோகிராம் 672 கிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us