சக்தி தொலைக்காட்சியின் விவாதப் போட்டியில் சாதனை படைத்த கமு/சது/வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!!
மஜீட். ARM
சக்தி தொலைக்காட்சியின் விவாதப் போட்டியில் வெற்றிபெற்று, பாடசாலைக்குப் பெருமை சேர்த்த கமு/சது/வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய மாணவச் செல்வங்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (13) திகதி பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி, இன்றைய உயர்நிலைக்குப் பாடசாலையை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றிய ஓய்வுபெற்ற அதிபர் திரு. சீனித்தம்பி பாலசிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர்களான திரு. மு. ராஜகோபால், திரு. க. பேரானந்தம் மற்றும் பாடசாலையில் பிரதி அதிபராகப் பணியாற்றி, தற்போது அயல் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி வரும் திரு. ந. புவிந்திரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வெற்றியாளர்களான மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
வருகை தந்த அனைத்து மதிப்பிற்குரிய கல்வியாளர்களையும் பாடசாலையின் தற்போதைய பிரதி அதிபர் திரு. மாணிக்கம் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில், ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றனர்.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, மாணவர்களுக்குப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்ததோடு, அவர்களின் எதிர்கால சாதனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை வாழ்த்தி, கௌரவித்த வருகை தந்த பெருந்தகைகள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
No comments