Column Left

Vettri

Breaking News

இன்று சிறப்பாக ஆரம்பமான காரைதீவு பத்திரகாளி அம்பாளின்  தீமிதிப்பு மகோற்சவம்




 இன்று சிறப்பாக ஆரம்பமான காரைதீவு பத்திரகாளி அம்பாளின்  தீமிதிப்பு மகோற்சவம்

( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின்
 வருடாந்த  மகோற்சவம் மற்றும் 
தீமிதிப்பு வைபவம் இன்று புதன்கிழமை (10) காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஆலயபிரதமபூசகர் கி.சரவணபவா தலைமையில் நடைபெறும் இம் மகோற்சவம், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்புவைபவத்துடன்  நிறைவுபெறவுள்ளதென ஆலயதலைவர்
கலாபூசணம் எஸ்..இராமநாதன் தெரிவித்தார்.


ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனியும் , 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முத்துச்சப்பற ஊர்வலமும் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் பகல் 12.30 மணிக்கும் இரவு 7.00 மணிக்கும் பூசைகள் நடைபெறும் என்று செயலாளர் எஸ்.கணேசலிங்கம்  தெரிவித்தார்.

No comments