புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஹிஜ்ரா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 2024,2025 ஆண்டில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (11 ) பாடசாலையின் அதிபர் ஏ.முகம்மட் இர்பான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
கடந்த இரு ஆண்டுகளில் வலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாஷிட் யஹ்யா(ADS) அக்கரைப்பற்று பிரசேசெயலகம் ,
A.M.தமீம்(ADP) உதவி திட்டமிடல் பணிப்பாளர் ,கௌரவ அதிதிகளாக வைத்தியர் சித்திரா தேவராஜன்,பீ,பீ,சி,மிரர் ஊடகவியலாளர் எஸ்.எம் .ஹபீசா.ஆசிரியர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள்,பெற்றோர்,மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
செல்வி வினாயக மூர்த்தி
No comments