Column Left

Vettri

Breaking News

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR!!




 இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தையொட்டி கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 'ஒற்றை - இரட்டை' இலக்க முறையின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையினூடாக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

No comments