கல்முனை மாநகரில் களைகட்டிய சந்தான ஈஸ்வரரின் மாபெரும் அழகு ரதபவனி; தாகசாந்தி.
கல்முனை மாநகரில் களைகட்டிய சந்தான ஈஸ்வரரின் மாபெரும் அழகு ரதபவனி; தாகசாந்தி.
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை நகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ மாபெரும் மாநகர அழகு ரதபவனி கடந்த (01) புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத் தலைவர் வே.செவ்வேட்குமரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அலங்கார சித்திரத் தேர்களை பெண்கள் வடம்பிடித்து ஆறு மணி நேரமாக இழுத்து வந்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பட்டாசுகள் முழங்க ரதங்கள் பவனி வந்தமை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. முழு மாநகரமே
அதிர்ந்து.
கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து சந்திரசேகரன் ராஜன் தலைமையில் பக்தர்களுக்கு இளநீர் வழங்கினர். பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதேபோன்று பல அமைப்புகள் இடையிடையே நீராகாரம் வழங்கினர்.
No comments