கண்ணகி அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் சித்திரை வருட கொண்டாட்ட கலாச்சார நிகழ்வுகள்!!
காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26/4/2026) அன்று காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் S.பாஸ்கரன் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் P. பிரணவ ரூபன் மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கலை கலாச்சார விடயங்களை விழிப்புணர்வூட்டும் வகையிலும் மற்றும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கிலும் கண்ணகி அறநெறி பாடசாலை மாணவர்களின் பங்குபெற்றுதலுடன் கலாச்சார விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments