Column Left

Vettri

Breaking News

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்தி பூங்காவில் உண்ணாவிரத போராட்டம்!!




 பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை முதல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியின் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Subscribe Us