Column Left

Vettri

Breaking News

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு 




கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு (வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் . கல்முனை கனடா பிராந்திய இணைய நிறுவனத்தினர் அந்த மக்களுக்கு சாரி மற்றும் பொங்கல் பானை அகப்பை உள்ளிட்ட உள்ளீடுகளை தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ். சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கழுகொல்ல சமூக செயற்பாட்டாளர் நந்தினி தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தாய்மாருக்கு இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.

No comments

Subscribe Us