பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு மகோற்சவம் ஆரம்பம்!
( வி.ரி.சகாதேவராஜா)
மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்
நேற்று (23) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
நாளை வியாழக்கிழமை 25.09.2025 மகாபாரத ஏடு திறந்து மகாபாரத பாராயணம் செய்தல் நிகழ்வு ஆரம்பமாகும்.
ஞாயிற்றுக்கிழமை 29.09.2025 திங்கட் கிழமை சுவாமி எழுந்தருளப்பண்ணலும் மறுநாள் செவ்வாய்க்கிழமை
30.09.2025 நாட்கால் வெட்டுதலும் நடைபெறும்.
தொடர்ந்து சனிக்கிழமை 04.10.2025 கல்யாணக்கால் வெட்டுதலும்
08.10.2025 வனவாசம்
09.10.2025 தவநிலை
இடம்பெற்று வெள்ளிக்கிழமை(10) மாலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற இருக்கின்றது .
மறு நாள் 11.10.2025 சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவு பெறும்.
No comments