( வி.ரி.சகாதேவராஜா)
தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவையும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு. புவனரூபன் நேற்று கையளித்தார்.
தனது அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாகவும்
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் அங்கு மேலும் உறுதியளித்தார்.
தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை
தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த வேப்பயடி கலைமகள் பாடசாலையின்
7 மாணவிகளுக்கும்
15ம் கிராமம் விவேகானந்தா பாடசாலையின்
4 மாணவிகளுக்கும் அப்பியாச கொப்பிகளை வழங்கி மாணவர்களை கெளரவித்து வைத்தார்.
இந்நிகழ்வு 2025/09/21 திகதி இடம்பெற்றது.
உபதவிசாளரின் சேவை மனப்பாங்கினை அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் வாழ்த்தியது.
தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் மேலும் எதிர்காலத்தில் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் உபதவிசாளர் கு.புவனரூபன்மேலும் தெரிவித்தார்.
No comments