வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை தாக்கியுள்ள ஆசிரியர்!!
அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விஞ்ஞான பாட ஆசிரியரால் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக ஆசிரியர் ஒருவர் மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை தாக்கியுள்ளார்.
இச்சம்பவமானது கடந்த 5ஆம் திகதி பாடசாலை நேரத்தில் நடைபெற்றுள்ளது.
பின்னர் பாடசாலையின் இரு பெண் ஆசிரியர்கள் மூலமாக அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற இம்மாணவியின் நிலைமை பாரதூரமாக இருந்துள்ளதால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துள்ளது.
பின்னர் மாணவி நேரடியாக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இன்று வரை மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தாய் வெளிநாட்டில் பணிப்புரிகின்றார். குறித்த மாணவி படுக்கையுடன் இருக்கும் தனது பாட்டியுடனும் தனது தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மூன்று சகோதரிகளும் பாடசாலையில் தான் கல்வி பயின்று வருகின்றனர்.
இத்தகைய குடும்பப் பின்னணி கொண்ட இவ்வாறான சிறுமிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
குறிப்பிட்ட ஆசிரியர் முன்னைய பாடசாலையில் இருந்து தண்டனைக்குரிய குற்றத்திற்காக இடமாற்றம் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments