தபால் உதவி அத்தியட்சகராக பைஸர் பதவியேற்பு !!
( வி.ரி.சகாதேவராஜா)
சாய்ந்தமருதைச் சேர்ந்த யூ.எல்.எம். பைசர் கடந்த 2025.05.14 ஆம் திகதி முதல் தபால் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகராகப் (Assistant Superintendent of Sri lanka posts) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் அவர் மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் கடமையை பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளார்.
பைசர் , தபால் திணைக்களத்தில் ஓர் அஞ்சல் அதிபராக பணியில் இணைந்து, அஞ்சல் அதிபர் தரம் I, இல், சித்திபெற்று, இலங்கையின் பல பாகங்களிலும் அஞ்சலதிபராக சேவையாற்றி, அதன் பின்னர், பிரதம அஞ்சல் அதிபராக பதவி உயர்வு பெற்று, அம்பாறை, கல்முனை ஆகிய பிரதம அஞ்சல் அலுவலகங்களில், பிரதம அஞ்சல் அதிபராக கடமை புரிந்தவர்.
பைசர் , அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (UPDO) ஸ்தாபக தலைவர் ஆவார். மேலும், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளராகவும் உள்ளார்.
திறமை,நேர்மை, உண்மை ஆகியவற்றை தன் வாழ்வின் உன்னத இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் தோழர் பைசர் அவர்கள், ஒரு மும்மொழித் தேர்ச்சி பெற்ற நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இன்றைய ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கவின் உரையையும் மொழி பெயர்த்தவர்.
தோழர் பைசர் அவர்கள், தமிழ் இலக்கியச் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவரும், ஓர் கவிஞரும்,இனமத பேதமற்ற உதவும் கரங்கள் கொண்ட ஒரு புரவலரும் ஆவார்.
No comments