. வெருகலம்பதியில் எண்ணெய்க் காப்பு சாத்த அலைமோதிய பல்லாயிரம் பக்தர்கள் !
வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் மகாவலி நதி தீரத்திலே அமைந்துள்ள வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி முருகபெருமானுக்கு எண்ணைய்க்காப்பு சாத்த இன்று (7) சனிக்கிழமை ஆயிரக்கணக்கான அடியார்கள் கியூ வரிசையில் அலைமோதினர்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கியூ வரிசை நீண்டிருந்தது.
காலையிலிருந்தே சுமார் ஐயாயிரம் அடியார்கள் கியூ வரிசையில் காத்து நின்றனர்.
காலை 7 மணிக்கு சென்ற ஒரு பக்தர் எண்ணைய்க்காப்பு சாத்த 13 மணியாகியது.
No comments