Column Left

Vettri

Breaking News

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் போசணை மிக்க உணவுக் கண்காட்சி !




 நூருல் ஹுதா உமர் 


போசாக்கு மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில், பல்வேறு வகையான போசணை  மிக்க உணவுகளை அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

போசணை மிக்க உணவுகளை வீட்டில் எளிமையாகவும், குறைந்த செலவில் தயாரிக்க கூடிய வகையில் தயாரித்து, அவற்றை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வாக இது அமைந்தது. 
நிகழ்வில் விற்றமின் மாமா உட்பட அனைத்து வகையான போசணை மிக்க உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உண்ணக் கூடாத உணவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில்  அன்னையர் ஆதரவு குழு அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டதுடன்.  மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போசணை மிக்க மதிய உணவும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் அலுவலகத்தின் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொது சுகாதார மாதுக்கள் மற்றும் பிற சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து சமகால பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டதுடன் தாய்மார்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வையும் வழங்கினர்.

மேலும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது
"சத்து  என்பது ஒரு குழந்தையின் அடித்தள வளமாகும்".சத்தான உணவுடன் அவர்களின் எதிர்கால வளர்ச்சியும் அமைந்துள்ளது, சிறு வயதிலேயே போசணை மிக்க உணவுகளை வழங்குவது வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்க்கைக்கு வழிகோலும் என்று கூறினார்.







No comments